உள்ளூர் செய்திகள்

கூடுவாஞ்சேரி அருகே ரெயில் மோதி வாலிபர் பலி

Published On 2023-03-25 10:45 GMT   |   Update On 2023-03-25 10:46 GMT
  • கூடுவாஞ்சேரி பெருமாள் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யா.
  • ரெயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம்:

கூடுவாஞ்சேரி பெருமாள் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யா (வயது 28). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி மார்க்கமாக பாண்டியன் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது இதை கவனிக்காமல் ஆதித்யா கூடுவாஞ்சேரியில் செல்போன் பேசிக் கொண்டே கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.

Tags:    

Similar News