உள்ளூர் செய்திகள்

நடத்தையில் சந்தேகம்- மனைவியை அரிவாளால் வெட்டிய அரசு பஸ் டிரைவர் கைது

Published On 2023-06-09 06:33 GMT   |   Update On 2023-06-09 06:33 GMT
  • வாக்குவாதத்தை தவிர்ப்பதற்காக மனைவி வீட்டுக்கு வெளியே செல்ல முயன்றார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள படந்தாள் வைகோ நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 33) சாத்தூர் அரசு பஸ் டெப்போவில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அங்காள ஈஸ்வரி (வயது 27). இவர் வீட்டின் அருகே பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவர்களுக்கு திருமணம் ஆகி எட்டு ஆண்டுகள் ஆகிறது 2 மகள்கள் உள்ளனர். மனைவி அங்காள ஈஸ்வரி நடத்தையில் சந்தேகம் அடைந்த கருப்பசாமி அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. பெரியவர்கள் பேசி சமாதானப்படுத்தி வைத்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அங்காள ஈஸ்வரி சமையல் வேலைகளை முடித்துவிட்டு செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வேறு அறையில் இருந்த கருப்பசாமி சமையலறைக்கு வந்து மனைவியை ஆபாசமாக பேசி திட்டி உள்ளார். வாக்குவாதத்தை தவிர்ப்பதற்காக மனைவி வீட்டுக்கு வெளியே செல்ல முயன்றார். அப்போது அவரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டிய கருப்பசாமி அங்கிருந்து அரிவாளை எடுத்து அவரை வெட்டினார். இதில் அங்காள ஈஸ்வரியின் மனுக்கட்டு முழங்கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

இதனால் அவர் அலறிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி உள்ளார். ஆனால் கருப்பசாமி அரிவாளுடன் அவரை துரத்திச் சென்றார் அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அவர்களை பார்த்ததும் கருப்பசாமி வீட்டு நூல் சென்று விட்டார். அக்கம் பக்கத்தினர் அங்காள ஈஸ்வரியை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் அங்காள ஈஸ்வரி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.

Tags:    

Similar News