விழுப்புரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து 7 ஆண்டுகளாக கஞ்சா விற்ற மூதாட்டி
- மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- ஒரு மூதாட்டியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மூதாட்டியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடம் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.
அவரது பெயர் விஜயா (வயது 60). இவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சிவஞானம் என்பவரின் மனைவி ஆவார். இவர் விழுப்புரத்தில் கே.கே.ரோடு பகுதியில் வாடகை வீடு எடுத்து 7 ஆண்டுகளாக வசித்து வந்தார். அங்கிருந்து பல்வேறு பகுதிக்கு கஞ்சா சப்ளை செய்துள்ளார். கூட்டேரிபட்டு-தீவனூர் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் கஞ்சாவிற்றபோது சிக்கியது தெரியவந்தது.