உள்ளூர் செய்திகள்

மதுரையில் ரெயிலில் கஞ்சா-குட்கா கடத்திய வாலிபர் கைது

Published On 2022-10-27 08:48 GMT   |   Update On 2022-10-27 08:48 GMT
  • பிளாட்பாரத்தில் ஒரு சாக்கு பையுடன் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார்.
  • உடனே போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, பின் முரணாக பதில் அளித்தார்.

மதுரை:

மதுரைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்து முனியாண்டி தலைமையில் போலீசார் இன்று அதிகாலை மதுரை ரெயில் நிலையத்துக்கு வந்த அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

மதுரை ரெயில் நிலையத்தின் 2-வது நடைமேடைக்கு இன்று அதிகாலை வந்த பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயிலில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பிளாட்பாரத்தில் ஒரு சாக்கு பையுடன் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார். உடனே போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, பின் முரணாக பதில் அளித்தார்.

இதையடுத்து போலீசார் அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையை சோதனையிட்டபோது அதில் 43 கிலோ கஞ்சா, குட்கா மற்றும் வெளிமாநில மதுபாட்டில்கள் ஆகியவை கடத்திச் செல்வது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அந்த வாலிபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதில் அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ஓடைத்தெரு, வள்ளுவர் நகரை சேர்ந்த காதர் பாட்ஷா (வயது 39) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News