உள்ளூர் செய்திகள்
திருத்தணியில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
- சந்தேகப்படும் படியாக நின்ற 2 வாலிபர்களிடம் போலீசார் சோதனை செய்த போது கஞ்சா இருந்தது.
- கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி:
திருத்தணி பஸ் நிலையம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும் படியாக நின்ற 2 வாலிபர்களிடம் சோதனை செய்த போது கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள் திருத்தணியை அடுத்த சிவாடா காலனியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ், தாழவேடு காலனியைச் சேர்ந்த தனுஷ் என்பது தெரிந்தது.
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.