உள்ளூர் செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்த விஜய் வசந்த்

Published On 2023-12-18 15:45 IST   |   Update On 2023-12-18 15:45:00 IST
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை.
  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அருகில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அருகில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆறுதல் கூறி அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். அவருடன் மாநகர மேயர் மகேஷ் உடன் இருந்தார்.

Tags:    

Similar News