உள்ளூர் செய்திகள்
கீழ மணக்குடி கிராமத்தில் மீன் பிடி இறங்கு தளம் திறப்பு
- மீன் பிடி இறங்கு தளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
- நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ், துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கீழ மணக்குடி கிராமத்தில் மீனவர் மற்றும் மீன்வளத்துறை சார்பில் 29.5 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட மீன் பிடி இறங்கு தளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மாவட்ட ஆட்சியர், நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ், துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பெரியோர்கள் கலந்து கொண்டனர்.