உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் திருமண நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து விபத்து- ஒருவர் படுகாயம்

Published On 2022-06-27 09:11 GMT   |   Update On 2022-06-27 09:11 GMT
  • பட்டாசில் இருந்து வெளியான தீப்பொறிகள் தருவைகுளத்தைச் சேர்ந்த சிங்கார செல்வம் என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது.
  • இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். மேலும் அப்பகுதியில் இருந்த 3 வீடுகள் மீதும் தீ பரவியது. இதில் அந்த வீடுகள் சேதம் அடைந்தன.

தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் திருமண நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திருமணத்தில் பங்கேற்பதற்காக ஏராளமானோர் அங்கு வந்திருந்தார்கள். இதையொட்டி அந்தப்பகுதியில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.

அப்போது திடீரென பட்டாசில் இருந்து வெளியான தீப்பொறிகள் தருவைகுளத்தைச் சேர்ந்த சிங்கார செல்வம் ( வயது 58) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது.

இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். மேலும் அப்பகுதியில் இருந்த 3 வீடுகள் மீதும் தீ பரவியது. இதில் அந்த வீடுகள் சேதம் அடைந்தன.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News