உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் அரசுப்பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை

Published On 2023-07-18 17:30 IST   |   Update On 2023-07-18 17:31:00 IST
  • மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
  • பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் பங்கேற்றனர்.

மாமல்லபுரம்:

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் அலுவலர் ராஜேஷ் கண்ணன் மேற்பார்வையில் மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் பங்கேற்றனர்.

திடீரென தீ பிடித்தால் பதட்டம் இன்றி எப்படி அணைப்பது, மேலும் பரவாமல் தடுப்பது, தீ காயம் ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை முறைகள் என்ன? தகவல்களை எப்படி பரிமாற வேண்டும், என்பவை குறித்த பயிற்சியை மாமல்லபுரம் தீயணைப்பு அலுவலர்கள் ரமேஷ்பாபு, வெங்கட கிருஷ்ணன் ஆகியோர் ஒத்திகையாக மாணவர்களுக்கு செய்து காண்பித்தனர்.

Tags:    

Similar News