உள்ளூர் செய்திகள்

ஆதம்பாக்கத்தில் மகன் கண் எதிரே தந்தை வெட்டிக்கொலை

Published On 2023-05-18 10:46 GMT   |   Update On 2023-05-18 10:46 GMT
  • தனது தந்தை தாக்கப்படுவதை கண்ட மகன் தடுக்க முயன்றபோது அவரையும் மர்மகும்பல் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது.
  • இரு கொலைகளுக்கும் பழிக்குப்பழியாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை:

ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது41). இவர் தனது வீட்டு அருகில் வசிக்கும் உறவினர் ஒருவரின் 16-ம் நாள் துக்க காரிய நிகழ்ச்சிக்காக 10-ம் வகுப்பு பயிலும் தனது மகனுடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆட்டோ மற்றும் 3 இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 8 பேர் கொண்ட மர்மகும்பல் சீனிவாசனை பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினர். தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தனது தந்தை தாக்கப்படுவதை கண்ட மகன் தடுக்க முயன்றபோது அவரையும் மர்மகும்பல் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

கொலையுண்ட சீனிவாசன் மீது 2014-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கும் 2021-ம் ஆண்டு பிரபல ரவுடி நாகூர் மீரான் கொலை வழக்கிலும் சிறைக்கு சென்று வந்தவர் எனவும் மேலும் பல வழக்குகள் அவர் மீது உள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த இரு கொலைகளுக்கும் பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கொலை சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பதிவை வைத்தும் விசாரணை செய்து தப்பி ஓடிய கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியான ஆதம்பாக்கத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News