உள்ளூர் செய்திகள்

திருப்பூர் வேலம்பட்டியில் பொதுமக்கள்- விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

Published On 2024-10-23 12:55 IST   |   Update On 2024-10-23 12:55:00 IST
  • நாளை முதல் சுங்கச்சாவடி செயல்பாட்டுக்கு வரும் என சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
  • அவிநாசிபாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வேலம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடி நீர்நிலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அதனை அகற்ற கோரியும் அந்தப்பகுதி பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், தன்னார்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நாளை முதல் சுங்கச்சாவடி செயல்பாட்டுக்கு வரும் என சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் இன்று சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு அவிநாசிபாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News