ஓசூரில் காரை வழிமறித்து கண்ணில் மிளகாய் பொடி தூவி விவசாயி சரமாரியாக வெட்டிக்கொலை
- ஜூஜூவாடியில் உள்ள மயானம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் காரை வழிமறித்தனர்.
- கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த சிவராம் உடலை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி பாலாஜி நகரை சேர்ந்தவர் சிவராம் (வயது51) விவசாயி. மேலும் இவர் வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் சிவராம் இன்று காலை, அந்த பகுதியில், பசுமாடுகள் தீவனத்திற்காக புற்களை அறுத்து காரில் ஏற்றி வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது வரும் வழியில் ஜூஜூவாடியில் உள்ள மயானம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் காரை வழிமறித்தனர்.
பின்னர் கண்ணில் மிளகாய் பொடி தூவி அவரை வெளியே இழுத்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ஒசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தியதில் சிவராமை நிலத்தகராறில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த சிவராம் உடலை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி, தப்பி சென்ற குற்றவாளிகள் 2 பேரையும் தேடி வருகின்றனர்.