உள்ளூர் செய்திகள்
திருக்கழுகுன்றம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
- திருக்கழுகுன்றம் அடுத்த தத்தலூரை சேர்ந்தவர் மதியழகன்.
- திருக்கழுகுன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுகுன்றம் அடுத்த தத்தலூரை சேர்ந்தவர் மதியழகன் (வயது52). விவசாயியான இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர்.
வீட்டில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கடந்த 8-ந்தேதி அவரது வயலில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து திருக்கழுகுன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.