உள்ளூர் செய்திகள்

ஏற்காட்டில் நாட்டு துப்பாக்கி, வெடி மருந்து வைத்திருந்த விவசாயி கைது

Published On 2023-07-26 06:45 GMT   |   Update On 2023-07-26 06:45 GMT
  • ரமேஷ் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • சப்- இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர் ஆனந்தம் ஆகியோர் ரமேஷ் வீட்டிற்கு சென்றனர்.

ஏற்காடு:

ஏற்காட்டில் சமீப காலமாக உரிமம் இல்லாமல் கள்ளத்துப்பாக்கி பயன்படுத்துவதாக புகார்கள் வந்தது.

இதையடுத்து ஏற்காடு பில்லேரி கிராமத்தில் உள்ள ரமேஷ் (வயது 38), விவசாயியான இவர் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர் ஆனந்தம் ஆகியோர் அவரது வீட்டிற்கு சென்றனர்.

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் வீட்டின் அருகில் உள்ள ஆட்டுப்பட்டியில் சோதனை செய்தனர்.

அப்போது உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி மற்றும் வெடி மருந்து பொருட்கள் 100 கிராமையும், ஈயக்குண்டுகள் 350 கிராம், சிறிய ஈய குண்டுகள் 100 கிராம் வீட்டில் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் ரமேசையும் கைது செய்தனர்.

இதற்கிடையே ஏற்காட்டில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் ஏற்காடு போலீஸ் நிலையத்தில் அனைத்து பஞ்சாயத்து தலைவர்கள் ஊர் பெரியவர்களை சந்தித்து வருகிற 30-ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இதில் பஞ்சாயத்து தலைவர்கள் ஊர் பெரியவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என வாழப்பாடி டி.எஸ்.பி. கூறி உள்ளார்.

Tags:    

Similar News