உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி விடுதியில் டிரைவர் மர்ம மரணம்- போலீசார் விசாரணை

Published On 2023-07-26 10:58 GMT   |   Update On 2023-07-26 10:58 GMT
  • நாகர்கோவிலில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் இதய நோய்க்காக சின்னத்துரை சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
  • போலீசார், சின்னத்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கன்னியாகுமரி:

நெல்லை கருப்பந்துறை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது54). திருமணமாகாத இவர் ஒரு கொரியர் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்தார்.

நாகர்கோவிலில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் இதய நோய்க்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த 21-ந்தேதி கன்னியாகுமரி வந்த சின்னத்துரை அங்குள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை அவர் தங்கி இருந்த அறை கதவு வெகு நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறை கதவை தட்டிப் பார்த்தனர். ஆனால் அவர் வெளியே வரவில்லை. உடனே லாட்ஜ் ஊழியர்கள் இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி மற்றும் போலீசார் லாட்ஜுக்கு விரைந்து சென்றனர். அவர்கள், அறை கதவை உடைத்து பார்த்தனர். அங்கு சின்னத்துரை படுக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதைத் தொடர்ந்து போலீசார், சின்னத்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News