உள்ளூர் செய்திகள்

கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் துன்புறுத்தல்- என்ஜினீயர் உள்பட 5 பேர் மீது வழக்கு

Published On 2023-07-05 04:16 GMT   |   Update On 2023-07-05 04:16 GMT
  • கணவர் கூடுதலாக 50 பவுன் நகை, ரூ. 10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தினார்.
  • குழந்தையை பார்க்க வந்த பிரபாகரன் மீண்டும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார்.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவாரம்பட்டி சிந்தாமணி தெருவை சேர்ந்தவர் விசாலாட்சி (வயது 23). இவர் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

எனக்கும் தேனி மாவட்டம் ஜக்கம்பட்டியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பிரபாகரன் (26) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது பெண் வீட்டார் சார்பில் 40 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம், ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கணவர் கூடுதலாக 50 பவுன் நகை, ரூ. 10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தினார். இதற்கு அவரது பெற்றோர் மாரிமுத்து-மாரியம்மாள், உறவினர்கள் கிருபாராணி, சுரேஷ் ஆகியோர் உடந்தையாக உள்ளனர்.

இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீசில் 2020-ம் ஆண்டு புகார் செய்தேன். போலீசார் சமூக நலத்துறை மூலம் எங்களை சமரசம் செய்து சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து அந்த புகாரை நான் வாபஸ் பெற்றேன்.

இதற்கிடையில் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க வந்த பிரபாகரன் மீண்டும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார். மேலும் விவாகரத்து கேட்டு தேனி கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்து உள்ளார். ஆனால் அவர் இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதுகுறித்து மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் புகார் அளித்தேன். அவர்கள் விருதுநகர் மாவட்ட சமூக நலத்துறையிடம் கவுன்சிலிங் செல்ல நடவடிக்கை எடுத்தனர். ஆனால் பிரபாகரன் தொடர்ந்து இந்த விவகாரத்தில் என்னை ஏமாற்றி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தி கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை துன்புறுத்தியதாக பிரபாகரன் அவரது பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

Tags:    

Similar News