உள்ளூர் செய்திகள்

ஆசனூர் அருகே வனப்பகுதியில் காட்டெருமை தாக்கி மாற்றுத்திறனாளி பலி

Published On 2022-12-29 04:10 GMT   |   Update On 2022-12-29 04:10 GMT
  • மாற்றுத்திறனாளி உயிரிழந்தது குறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்லும் படி வனத்துறையினர் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த முதியனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (38) மாற்றுத்திறனாளி. சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் சாம்ராஜ்நகர் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

அப்போது வனப்பகுதியில் இருந்து காட்டெருமை கூட்டம் ரோட்டை கடந்து சென்றது. அதில் ஒரு காட்டெருமை ராஜூவின் தலையில் தாக்கியது. இதில் கீழே விழுந்த அவருக்கு காதில் ரத்தம் வந்தது. அப்போது அவரை அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் 108 ஆம்புலன்சு மூலம் தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜூ பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்லும் படி வனத்துறையினர் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Tags:    

Similar News