உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-02-21 12:44 IST   |   Update On 2023-02-21 12:44:00 IST
  • ஊராட்சி செயலாளர்களை வட்டம் விட்டு வட்டாரம் பணியிட மாறுதல் செய்து வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து மீண்டும் அதே வட்டாரத்தில் பணி வழங்க வேண்டும்.
  • ஊரக வளர்ச்சி அளவில் பணி புரியும் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் அதிகபட்சமாக 20 கி.மீ. தொலைவிற்குள் பணி மாறுதல் வழங்கி பயண நேரத்தை குறைக்க வேண்டும்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் மெல்கி ராஜா சிங் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சி.காந்திமதி நாதன், மணிகண்டன், இளங்கோவன், ஜெய்ஹிந்த், பிரபு, சந்தானம் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது, திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை வட்டம் விட்டு வட்டாரம் பணியிட மாறுதல் செய்து வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து மீண்டும் அதே வட்டாரத்தில் பணி வழங்க வேண்டும்.

மாவட்ட ஊரக வளர்ச்சி அளவில் பணி புரியும் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் அதிகபட்சமாக 20 கி.மீ. தொலைவிற்குள் பணி மாறுதல் வழங்கி பயண நேரத்தை குறைக்க வேண்டும். விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரங்களில் ஆய்வு கூட்டங்களை நடத்துவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் ராஜேந்திரன், மணி சேகர், மீரா, கண்ணன், ஜார்ஜ், தேவ சகாயம், ஜெய்சங்கர் முனுசாமி, சோமசேகர், பிரசாத், சரவணமூர்த்தி, நா.சீனிவாசன், பரசுராமன், இரா. ஸ்ரீராம் காந்தி, மகேந்திரன், பாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News