உள்ளூர் செய்திகள்

தேர்தல் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தொடக்கம்

Published On 2023-01-30 13:15 IST   |   Update On 2023-01-30 13:15:00 IST
  • மாவட்டத் தேர்தல் அலுவலர் கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரின் கையெழுத்து அடங்கிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
  • இன்றும், நாளையும் இந்த பணி நடைபெறும் என உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படை, வாக்குச்சாவடிகளை கண்காணித்தல், வேட்பு மனுக்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மாநகராட்சி, வருவாய், பள்ளி கல்வித்துறை என 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது.

மாவட்டத் தேர்தல் அலுவலர் கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரின் கையெழுத்து அடங்கிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இன்றும், நாளையும் இந்த பணி நடைபெறும் என உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News