உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

உடன்குடியில் கல்லூரி பெண் ஊழியர் தற்கொலை: போலீசார் விசாரணை

Published On 2023-11-30 11:04 IST   |   Update On 2023-11-30 11:04:00 IST
  • செல்வபாரதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • செல்வபாரதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடன்குடி:

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் செல்வபாரதி (வயது25). இவர் ஒரு தனியார் கல்லூரியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.

நேற்று வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற அவர் மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவரது தாய் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் செல்வபாரதி பிணமாக தொங்கினார்.

இது தொடர்பாக தகவலறிந்ததும் குலசேகரன் பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வபாரதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்வபாரதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News