உள்ளூர் செய்திகள்

செலவுக்கு பணம் கொடுக்காததால் தாயை அரிவாளால் வெட்டிய மகன்

Published On 2023-03-07 14:25 IST   |   Update On 2023-03-07 14:25:00 IST
  • மணிகண்டன் அரிவாளால் தாய் அமுலுவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
  • சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

தாம்பரம்:

தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் அமுலு (59). இவரது மகன் மணிகண்டன். ஆட்டோ டிரைவர். நேற்று மாலை அவர், வீட்டில் இருந்த தாய் அமுலுவிடம் செலவுக்கு பணம் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அரிவாளால் தாய் அமுலுவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அமுலுவுக்கு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

Similar News