உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் நாளை வருகிறார் தலைமை செயலர்

Published On 2022-07-02 11:37 GMT   |   Update On 2022-07-02 11:37 GMT
  • செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் பூஞ்சேரி போர் பாய்ண்ட்ஸ் அரங்கம் வளாக பகுதிகளில் நடைபெறும்.
  • மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் துவங்குகிறது.

மாமல்லபுரம்:

இம்மாதம் 28ம் தேதி மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச "செஸ் ஒலிம்பியாட்" துவங்குகிறது., இதில் பங்கேற்கும் 188 நாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், அந்நாட்டு ஊடகவியலாளர்கள் என 2,500க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரம் வருகிறார்கள்.

ஒலிம்பியாட் போட்டிக்கு வரும் அனைத்து வெளிநாட்டு வீரர்களுக்கும் சுற்றுலாவாக மாமல்லபுரம் புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்சுனன்தபசு, வெண்ணை உருண்டைக்கல் பாறை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி கான்பிக்க, தமிழ்நாடு சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. இதை அடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். சாலையோரம் குப்பைகள் தேங்கம் இருக்ககூடாது, நகரம் முழுவதும் தூய்மையாக இருக்க வேண்டும், மாடு, நாய், பன்றி போன்ற கால்நடைகள் நகரவீதியில் சுற்றக்கூடாது, முக்கியமாக கொசுத் தொல்லை, இருக்ககூடாது என பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

"செஸ் ஒலிம்பியாட்" போட்டி நடைபெறும் பூஞ்சேரி போர் பாய்ண்ட்ஸ் அரங்கம் வளாக பகுதிகளில் நடைபெறும் பணிகள் மற்றும் மாமல்லபுரம் நகர பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய நாளை தலைமை செயலர் இறையன்பு மற்றும் அனைத்து துறை செயலர்களும் மாமல்லபுரம் வருவதாக கூறப்படுகிறது. அதனால் இன்று அப்பகுதிகளை கலைக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News