உள்ளூர் செய்திகள்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை திடீர் ரத்து

Published On 2022-06-19 16:14 IST   |   Update On 2022-06-19 16:14:00 IST
  • வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் பிரமாண்ட பந்தல் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தி.மு.க. நிர்வாகிகள் தயார் நிலையில் இருந்தனர். தொண்டர்களும், உற்சாகமாக இருந்தனர்.

வேலூர்:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) மற்றும் 21-ந்தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு வருகை தருவதாக இருந்தது.

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக திறப்பு விழா மற்றும் தனியார் ஆஸ்பத்திரி திறப்பு விழா, வேலூர் புதிய பஸ் நிலையம் திறப்பு விழா, திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக திறப்பு விழா மற்றும் 3 மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. 3 மாவட்டங்களிலும் பிரமாண்ட பந்தல் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தி.மு.க. நிர்வாகிகள் தயார் நிலையில் இருந்தனர். தொண்டர்களும், உற்சாகமாக இருந்தனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை மற்றும் நிகழ்ச்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரது வருகை குறித்து பின்னர் தேதி அறிவிக்கப்படும் என வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News