உள்ளூர் செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

Published On 2022-07-15 16:57 IST   |   Update On 2022-07-15 16:57:00 IST
  • மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதையொட்டி மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு.
  • கலெக்டர் ஆ.ர.ராகுல் நாத் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், 44-வது செஸ் ஒலியமியாட் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதையொட்டி, மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்வது குறித்து மாவட்ட கலெக்டர் ஆ.ர.ராகுல் நாத் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சா.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News