உள்ளூர் செய்திகள்

பஸ்சில் மோதல்- சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

Published On 2023-08-21 09:07 GMT   |   Update On 2023-08-21 09:07 GMT
  • ராஜேசை கத்தியால் குத்திவிட்டு கல்லூரி மாணவர்கள் ஓடிவிட்டனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த ரஜினி என்பவரின் மகன் ராஜேஷ் ஆனந்த் (வயது 18). பச்சையப்பன் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று பஸ்சில் வரும் போது இவருக்கும் மாநிலக் கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் ராஜேசை கத்தியால் குத்திவிட்டு மாநிலக் கல்லூரி மாணவர்கள் ஓடிவிட்டனர். சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரே நடந்த சம்பவம் தொடர்பாக பெரியமேடு போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவின் மூலம் துப்புத் துலங்கி அரக்கோணத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி (20). திருத்தணியை சேர்ந்த பூபதி (19), ஆகாஷ் (18) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மாநிலக் கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News