உள்ளூர் செய்திகள்

துபாயில் இருந்து வந்தபோது சிக்கினார்- சென்னை விமான நிலையத்தில் பஞ்சாப் குற்றவாளி கைது

Published On 2023-01-03 09:58 GMT   |   Update On 2023-01-03 09:58 GMT
  • துபாயில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் வந்தது.
  • பஞ்சாப் மாநில போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
துபாயில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்தவர்களின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்த ஜோபன்பிரீத் சிங்(22) என்பவர் வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் பஞ்சாப் மாநில போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News