உள்ளூர் செய்திகள்

கடையில் புகையிலை பொருட்களை விற்ற முதியவர் கைது

Published On 2023-01-10 16:00 IST   |   Update On 2023-01-10 16:00:00 IST
  • டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கூடுவாஞ்சேரி:

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ரெயில்வே ஸ்டேசன் ரோடு அருகே உள்ள ஒரு டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டீக்கடையில் சோதனை செய்தபோது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து டீக்கடைக்காரர் சுந்தர் (வயது 64), என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News