உள்ளூர் செய்திகள்

விபத்துக்குள்ளான சொகுசு பஸ் மற்றும் லாரியை படத்தில் காணலாம்.

மேச்சேரி அருகே விபத்து: சொகுசு பஸ் - லாரி மோதி டிரைவர், கிளீனர் பலி

Published On 2023-04-08 06:38 GMT   |   Update On 2023-04-08 06:38 GMT
  • விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
  • விபத்தில் பலியான லாரி டிரைவர் மற்றும் கிளீனர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேட்டூர்:

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஊட்டி நோக்கி நேற்று ஒரு சொகுசு பஸ் புறப்பட்டு வந்தது. பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள திமிரிகோட்டை அருகே பஸ் வந்துகொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து வந்த லாரி, எதிர்பாராதவிதமாக சொகுசு பஸ் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சின்னப்பன், மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த கிளீனர் முத்துசாமி ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்டதும் சொகுசு பஸ் டிரைவர் குதித்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். பஸ்சில் பயணம் செய்த பிரபா என்ற பயணிக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்ற பயணிகள் காயமின்றி தப்பினர். இந்த விபத்து காரணமாக அந்த வழியே போக்குவரத்து பாதித்தது.

விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான லாரி டிரைவர் மற்றும் கிளீனர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News