உள்ளூர் செய்திகள்

பங்களாபுதூர் அருகே தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி பலி

Published On 2023-06-04 04:53 GMT   |   Update On 2023-06-04 04:53 GMT
  • சிகிச்சை பிரிவில் இருந்த நாகேஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
  • பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பங்களாபுதூர் அருகே உள்ள புஞ்சை துறையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி(62). இவர் தனது தம்பி சுப்பிரமணியம் வீட்டில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று நாகேஸ்வரி பங்களாபுதூர் அருகே உள்ள ஆனந்த கவுண்டர் தோட்டத்தில் தென்னை ஓலை எடுத்து வர சென்றுள்ளார். ஓலை எடுத்து வரும்போது அங்கிருந்த தென்னை மரத்தில் தேன் கூட்டில் ஓலையின் ஒரு பகுதி பட்டு தேனீக்கள் நாகேஸ்வரியை விரட்டி விரட்டி கொட்டியது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக டி.என்.பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சையில் இருந்தவர் மருத்துவர் அறிவுறுத்தல் படி மீண்டும் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நாகேஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News