உள்ளூர் செய்திகள்
100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அரசு-தனியார் பஸ்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்
- தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
- வாக்களிப்பது நமது கடமை என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி இன்று தொடங்கியது.
திருப்பூர்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களியுங்கள், வாக்களிப்பது நமது கடமை என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி இன்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பஸ்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி தொடங்கி வைத்தார்.