உள்ளூர் செய்திகள்

கோயம்பேட்டில் மனைவியுடன் தகராறு- ஆட்டோ டிரைவர் தற்கொலை

Published On 2022-06-30 06:46 GMT   |   Update On 2022-06-30 06:46 GMT
  • கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜோதி கணவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
  • இதனால் மனமுடைந்த சிவா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போரூர்:

கோயம்பேடு குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 42) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஜோதி. தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜோதி கணவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த சிவா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News