உள்ளூர் செய்திகள்

அத்திப்பட்டு புதுநகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை

Published On 2022-11-05 14:12 IST   |   Update On 2022-11-05 14:12:00 IST
  • தனியார் நிறுவனங்கள் மழைநீர் வடிகால் பகுதியை சுற்றி மதில் சுவர் கட்டியதால் மழைநீர் வெளியேறாமல் பாதிப்பு ஏற்படுகிறது.
  • அத்திப்பட்டுபுது நகரில் மழை நீர் தேங்காத வண்ணம் கண்மாய்கள், சிறு பாலங்கள், அமைக்க தனியார் நிறுவனங்கள் அரசு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

வடகிழக்கு பருவ மழை காரணமாக அத்திப்பட்டு புது நகரில் மழைநீர் தேங்கி வெளியேற முடியாமல் காணப்பட்டதால் ஊராட்சி நிர்வாகம் ராட்சத மோட்டார் எந்திரங்களை பயன்படுத்தி மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.

மழை வெள்ள பாதிப்புகள் தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் பொன்னேரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப் கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் கதிர்வேல் அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மழைநீர் வடிகால் பகுதியை சுற்றி மதில் சுவர் கட்டியதால் மழைநீர் வெளியேறாமல் பாதிப்பு ஏற்படுகிறது. மழைநீர் கால்வாயை தூர்வாரி, அகலப்படுத்த வேண்டும், கரைகளை பலப்படுத்த வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனைக் கேட்ட சப்-கலெக்டர் ஆக்கிரமிப்புகளை அகற்றி அத்திப்பட்டுபுது நகரில் மழை நீர் தேங்காத வண்ணம் கண்மாய்கள், சிறு பாலங்கள், அமைக்க தனியார் நிறுவனங்கள் அரசு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

Similar News