உள்ளூர் செய்திகள்
ஆலங்குளம் இரட்டை கொலையை கண்டித்து தென்காசியில் இன்று வக்கீல்கள் சாலை மறியல்
- தென்காசியில் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
- தென்காசி-நெல்லை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
தென்காசி:
ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் வக்கீல் அசோக்குமார் மற்றும் அவரது பெரியப்பா துரைராஜ் ஆகியோர் நேற்று இரவு ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
இதனை கண்டித்து தென்காசியில் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி-நெல்லை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் நேரில் சென்று வக்கீல்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எஸ்.பி. உறுதி அளித்ததால் வக்கீல்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.