உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரத்தில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-16 11:16 GMT   |   Update On 2022-12-16 11:16 GMT
  • பெண்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் டி.கே.எம் சாலையில் திரண்டு, ஊர்வலமாக சென்று அங்கு கடைவீதியில் கூடியிருந்த மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
  • மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உத்தரவின் பெயரில், இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், தலைமையில் போலீசார் காவல் பணியில் ஈடுபட்டனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகில் இன்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மாமல்லபுரம் அ.தி.மு.க.வினர் சார்பில், தி.மு.க ஆட்சியில் சொத்துவரி, மின் கட்டணம், பால், விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என குற்றம் சாட்டி, அதை கண்டித்து நகர செயலாளர் கணேசன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. தனபால், முன்னாள் பேரூராட்சி தலைவர் எஸ்வந்த்ராவ், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், துணைத்தலைவர் ராகவன், திருக்கழுக்குன்றம் நகர செயலாளர் தினேஷ்குமார், வேலாயுதம், தணிகைவேல், ஜெயச்சந்திரன், செல்வம், விஜயரங்கன் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

பின்னர் பெண்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் டி.கே.எம் சாலையில் திரண்டு, ஊர்வலமாக சென்று அங்கு கடைவீதியில் கூடியிருந்த மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர். மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உத்தரவின் பெயரில், இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், தலைமையில் போலீசார் காவல் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News