உள்ளூர் செய்திகள்

அம்பத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Published On 2023-10-24 15:13 IST   |   Update On 2023-10-24 15:13:00 IST
  • எடப்பாடி பழனிசாமி அறிவித்த அறிவிப்புகளை, பாக பொறுப்பாளர்களுக்கு எடுத்து கூறினார்.
  • மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் பலர் ஆலோசனை கலந்து கொண்டனர்.

அம்பத்தூர்:

திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்பத்தூர் தொகுதியில் பாகப் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான ஐ.எஸ்.இன்பதுரை கலந்துகொண்டு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த அறிவிப்புகளை, பாக பொறுப்பாளர்களுக்கு எடுத்து கூறினார்.

கூட்டத்தில் ஐ.எஸ்.இன்பதுரை பேசுகையில், அ.தி.மு.க.வின் நேர்மையான, உண்மையான, உணர்ச்சிமிக்க, தொண்டர்கள் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்றி விரைவில் கோட்டை கொத்தளத்தில் எடப்பாடியார் கொடியேற்ற அனைவரும் ஒற்றுமையாக களப்பணி ஆற்ற வேண்டும். எம். ஜி. ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் மக்களாட்சியை எடப்பாடியார் தலைமையில் அமைக்க பாடுபட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் திண்டு உத்தமராஜ், துணை செயலாளர் முகப்பேர் பாலன், பொருளாளர் வி.கே.ரவி, இணை செயலாளர் தேவகி, இந்திராணி, பொதுக்குழு உறுப்பினர் மீனாபாண்டியன் , பகுதி செயலாளர்கள் கே.பி.முகுந்தன், ஜெ.ஜான், சி.வி.மணி, கிருஷ்ணன் , எல்.என்.சரவணன், வழக்கறிஞர் டி.அறிவரசன், எஸ்.பிரபாகரன், பத்மநாபன், பாஸ்கர், ஜான்பீட்டர், வழக்கறிஞர்கள் எம்.பி.சுருளிராஜன், வி.பார்த்த சாரதி, துரைநாகராஜ், வட்ட செயலாளர் மணிகண்டன் உட்பட மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News