உள்ளூர் செய்திகள்
தாம்பரம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்-மனைவி, மகள் உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு
- சேலையூர், சாந்தா நகர், 1-வது குருகு தெரு பகுதியில் வசிப்பவர் சங்கர்.ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த சேலையூர், சாந்தா நகர், 1-வது குருகு தெரு பகுதியில் வசிப்பவர் சங்கர்.ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் விட்டின் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் கஞ்சா போதையில் வந்த 2 வாலிபர்கள் திடீரென சங்கரிடம் ரகளையில ஈடுபட்டு அரிவாளால் வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு தடுக்க வந்த மனைவி பேபி, மகள் ராஜராஜேஸ்வரி, தாய் குஞ்சரம் ஆகியோரையும் மர்ம நபர்கள் வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர்.
இதில் பலத்த காயம்அடைந்த சங்கர் மற்றும் அவரது தாய் குஞ்சரம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.