உள்ளூர் செய்திகள்

வடபழனி கிளப்பில் சூதாடிய 35 பேர் கைது

Published On 2023-07-07 06:39 GMT   |   Update On 2023-07-07 06:39 GMT
  • போலீசார் கிளப்பிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
  • சூதாட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

போரூர்:

வடபழனி, ஆற்காடு சாலையில் உள்ள கிளப்பில் சூதாட்டம் நடப்பதாக தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கிளப்பிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அங்கு சூதாட்டம் நடத்தி வருவது தெரிய வந்தது.

இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.57 ஆயிரம் பறி முதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News