உள்ளூர் செய்திகள்

வால்பாறையில் 11-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பெயிண்டர் கைது

Published On 2022-06-08 09:34 IST   |   Update On 2022-06-08 09:34:00 IST
  • திருமண ஆசை காட்டி 11-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பெயிண்டரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை:

கோவை மாவட்டம் வால்பாறை டாப் டிவிசன் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 21). பெயிண்டர்.

இவரது உறவுப்பெண் அதே பகுதியில் வசித்து வருகிறார். 16 வயதான அவர் அங்குள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

உறவினர்கள் என்பதால் பாலசுப்பிரமணியனும், அந்த பெண்ணும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாலசுப்பிரமணியன் அந்த பெண்ணை காதலிப்பதாக தெரிவித்தார். அந்த பெண்ணும் அதனை ஏற்றுக் கொண்டு நெருங்கி பழகினார்.

திருமண ஆசை காட்டி அந்த பெண்ணுடன் பாலசுப்பிரமணியன் உல்லாசமாக இருந்தார். அடிக்கடி தனிமையில் சந்தித்து உலலாசமாக இருந்ததில் அந்த மாணவி 5 மாத கர்ப்பம் ஆனார். இதனை குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் மாணவி மறைத்து வந்தார்.

கர்ப்பம் காரணமாக மாணவிக்கு அடிக்கடி வயிற்று வலி, உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மாணவியை அவரது பெற்றோர் டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது மாணவி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பாலசுப்பிரமணியை சந்தித்து அவரை கண்டித்தனர். அதற்கு அவர் மாணவியின் பெற்றோரை உதாசீனப்படுத்தி திட்டி அனுப்பியதுடன் உங்கள் மகளை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும் கூறி அனுப்பி வைத்தார்.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி வால்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News