உள்ளூர் செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே மர்ம காய்ச்சலுக்கு 11 மாத குழந்தை பலி

Published On 2023-07-02 12:09 IST   |   Update On 2023-07-02 12:09:00 IST
  • குழந்தை அப்ரினுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டது.
  • மர்ம காய்ச்சல் பாதிப்பால் குழந்தை இறந்து இருப்பது தெரிந்தது.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கத்தில் வசித்து வருபவர் நஜீபுத்தீன். இவரது மனைவி இம்ரான்பேகம். இவர்களுக்கு 11 மாதத்தில் அப்ரின் என்று பெண் குழந்தை இருந்தது.

இவர்களது சொந்த ஊர் அசாம் மாநிலம் ஆகும். நஜீபுத்தீன் தேர்வாய் கண்டியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் குழந்தை அப்ரினுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டது. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறைய வில்லை.

இதையடுத்து குழந்தை அப்ரினை ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.

மர்ம காய்ச்சல் பாதிப்பால் குழந்தை இறந்து இருப்பது தெரிந்தது. இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சுகாதார அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News