உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய 108 ஆம்புலன்ஸ்- வழி ஏற்படுத்திய பா.ம.க. தலைவர்

Published On 2024-02-12 10:03 IST   |   Update On 2024-02-12 10:03:00 IST
  • பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிள் பேரணியாக வந்து வரவேற்பு அளித்தனர்.
  • அன்புமணி ராமதாஸ் உடனடியாக ஆம்புலன்ஸ் செல்வதற்காக, சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர் செய்து ஆம்புலன்ஸ் செல்ல வழியை ஏற்படுத்தினார்.

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பா.ம.க. கட்சி கொடியை ஏற்ற பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையிலிருந்து திண்டிவனத்திற்கு வந்தார். அவருக்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிள் பேரணியாக வந்து வரவேற்பு அளித்தனர்.

இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் நெரிசலில் சிக்கியது.

இதனைக் கண்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உடனடியாக ஆம்புலன்ஸ் செல்வதற்காக, சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர் செய்து ஆம்புலன்ஸ் செல்ல வழியை ஏற்படுத்தினார். இதனை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News