உள்ளூர் செய்திகள்

பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கால்நடை வளர்க்கும் பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

Published On 2023-01-02 14:37 IST   |   Update On 2023-01-02 14:37:00 IST
  • திட்ட தொழில் சாரா வல்லுநர் லெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
  • 62 பயனாளிகளுக்கு சுமார் ரூ.75 ஆயிரம் மதிப்பில் அலுமினிய அன்னக்கூடை வழங்கப்பட்டது.

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் குழுவில் உள்ள கால்நடைகள் வளர்க்கும் பெண்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய கவுன்சிலர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி முன்னிலை வகித்தார்.

முன்னாக திட்டத்தின் தொழில் சாரா வல்லுநர் லெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

இதில் 62 பயனாளிகளுக்கு சுமார் ரூ.75 ஆயிரம் மதிப்பில் அலுமினிய அன்னக்கூடை, சில்வர் பால் வாலி ஆகியவை வழங்கப்பட்டது.

இதில் ஊராட்சி உநுப்பினார்கள் பாலசுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், செங்குட்டுவன், லோகநாதன், கலையரசன், குழு நிர்வாகிகள், உறுப்பினார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News