உள்ளூர் செய்திகள்

தீயில் சேதம் அடைந்த கரும்புகள்.

காட்டுமன்னார்கோவில் அருகே கரும்பு தோட்டத்துக்கு தீ வைப்பு:ரூ.20 லட்சம் மதிப்புள்ள கரும்புகள் சேதம்

Published On 2023-03-04 14:51 IST   |   Update On 2023-03-04 14:51:00 IST
  • ஆண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் 10 ஏக்கருக்கு மேல் கரும்பு நடவு செய்திருந்தார்.
  • தீ வைக்கப்பட்ட 10 ஏக்கர் கரும்பு வயல் முற்றிலும் எரிந்து சேதமானது

கடலூர்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஆண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் 10 ஏக்கருக்கு மேல் கரும்பு நடவு செய்திருந்தார். இவரைப் போலவே அருகில் உள்ள விவசாயிகள் பலரும் கரும்பு பயிரிட்டு தற்போது அறுவடை செய்து வருகின்றனர். இந்நிலையில் கருப்பையாவின் கரும்புஇன்னும் சில தினங்களில் அறுவடை செய்யவுள்ள நிலையில் அவரது கரும்பு வயலை அப்பகுதியை சேர்ந்தசிலர் முன்விரோதம் காரணமாக தீ வைத்ததாக கருப்பையா தெரிவித்து வருகிறார்.  தீ வைக்கப்பட்ட 10 ஏக்கர் கரும்பு வயல் முற்றிலும் எரிந்து சேதமானது.

                                                                                                       மேலும் விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வைத்திருந்த நீர்மூழ்கி மோட்டார் மற்றும் போர்வெல்லும் சேர்ந்து தீயில் சேதம் ஆனது. இதனால்   20 லட்சம் ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. கரும்பு வயல் தீ விபத்தில் எரிந்து சேதமான நிலையில் இதுகுறித்து கரும்பு வயலைஅதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றுள்ளனர்.மேலும் இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதால் புகாரின் அடிப்படையில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளார். கரும்பு வெட்டி சர்க்கரை ஆலைக்கு அனுப்பும்போது தீயில் எரிந்த கரும்புவிற்கு அதிகாரிகள் சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனுமதி அளித்து கரும்புவைஎடுத்துக் கொண்டு முழு விலை தர வேண்டும் எனவும் கருப்பையா தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News