உள்ளூர் செய்திகள்

கைதான இருவரை படத்தில் காணலாம்.

சின்னசேலம் அருகே சப்- இன்ஸ்பெக்டரை மிரட்டிய 2 பேர் கைது

Published On 2023-02-14 10:16 GMT   |   Update On 2023-02-14 10:16 GMT
நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அதே ஊரை சேர்ந்த உதயகுமார் (வயது 24), விஜயபாரதி வயது (24) ஆகிய 2 பேரும் மது அருந்தி கொண்டு இருந்தனர்.


கள்ளக்குறிச்சி:

சின்னசேலம் அருகே உள்ள கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஏழுமலை. இவர் கடந்த 8 -ந்தேதி நல்லாத்தூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்பொழுது நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அதே ஊரை சேர்ந்த உதயகுமார் (வயது 24), விஜயபாரதி வயது (24) ஆகிய 2 பேரும் மது அருந்தி கொண்டு இருந்தனர்.

இதுகுறித்து சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை இருவரையும் விசாரித்தார். அப்போது உதயகுமார், விஜயபாரதி ஆகியோர் குடிபோதையில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்து அரசு பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

இதுகுறித்து கச்சிராய பாளையம் போலீஸ் நிலை யத்தில் ஏழுமலை கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த 2பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News