உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

பைக் மீது கார் மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி

Published On 2022-11-19 07:21 GMT   |   Update On 2022-11-19 07:21 GMT
  • பொட்டி செட்டிபட்டி பிரிவு பகுதியில் சாலையில் சென்றபோது கார் பைக் மீது மோதியதில் படுகாயந்து உயிரிழந்தார்.
  • இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரித்து வருகின்றார்.

திண்டுக்கல்:

கொடைரோடு அருகே சாண்டலார்புரத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 56). இவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்ட ராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

பொட்டி செட்டிபட்டி பிரிவு பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த கார் பைக் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட வெள்ளைச்சாமி படுகாயம் அடைந்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரித்து வருகின்றார்.

Tags:    

Similar News