உள்ளூர் செய்திகள்

பள்ளி, கல்லூரியில் பயிலும்740 மாணவிகளுக்கு கை கடிகாரங்கள்

Published On 2023-04-23 09:33 GMT   |   Update On 2023-04-23 09:33 GMT
  • மாணவ, மாணவியருக்கு தங்ககாதணிகள், வாட்டர் பாட்டில்கள் என பல்வேறு ஊக்கப்பரிசுகளை வழங்கி வருகிறது.
  • ரூ. 7.7 லட்சம் மதிப்பிலான கை கடிகாரங்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

கிருஷ்ணகிரி,

ஐ.வி.டி.பி நிறுவனம் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை மட்டுமில்லாமல், அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு தங்ககாதணிகள், வாட்டர் பாட்டில்கள் என பல்வேறு ஊக்கப்பரிசுகளை வழங்கி வருகிறது.

இதனையடுத்து ஓசூர் ஜான் போஸ்கோ பள்ளியின் 270 மாணவிகளுக்கு, அப்பள்ளி ஆண்டு விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் சிறப்பான பங்களிப்பை பாராட்டும் வகையில் ரூ.2.94 லட்சம் மதிப்பிலான கை கடிகாரங்கள், வேலூர் அக்சீலியம் கல்லூரி வணிக நிர்வாகத் துறையின் வெள்ளி விழாவை முன்னிட்டு,

அத்துறையைச் சார்ந்த 460 மாணவிகளுக்கு ரூ.4.66 லட்சம் மதிப்பிலான கை கடிகாரங்கள், ஆரணி புனித ஜோசப் விடுதியைச் சார்ந்த 12-ம் வகுப்பு பயிலும் 10 மாணவியருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கை கடிகாரங்கள் என 740 மாணவியருக்கு மொத்தம் ரூ. 7.7 லட்சம் மதிப்பிலான கை கடிகாரங்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

கை கடிகாரங்களை வழங்கி பேசிய ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் பெண்கள் கல்வி கற்பதின் அவசியத்தை எடுத்துரைத்து, மாணவிகள் நன்றாகப் படித்து வாழ்வில் மேன்மேலும் உயர்ந்து, தங்களால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்ய முன் வரவேண்டும் என அறிவுறுத்தினார்.

Similar News