உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே ஜூஜுவாடியில் உள்ள அரசு பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்ற காட்சி.

மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு

Published On 2023-06-15 15:43 IST   |   Update On 2023-06-15 15:43:00 IST
  • பள்ளிக்கு வந்த சிறுவர் சிறுமியருக்கு பூக்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி, வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • தமிழகத்தில், 1 முதல் 5- ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜூஜுவாடியில் உள்ள மாநகராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கு வந்த சிறுவர் சிறுமியருக்கு பூக்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி, வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், மாநகராட்சி கவுன்சிலர் அசோகா, மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் ஊராட்சி தலைவர் ஆனந்த ரெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, பள்ளிக்கு வந்த சிறுவர்,சிறுமியரை வாழ்த்தி வரவேற்றனர். தொடர்ந்து இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

மேலும் இதில், தலைமையாசிரியர் பிரகாஷ் மற்றும் ஆசிரிய ஆசிரியையர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News