உள்ளூர் செய்திகள்

அரசு பஸ்சை சிறை பிடித்து மாணவ- மாணவிகள் நடுரோட்டில் அமர்ந்து மறியல் செய்த காட்சி. 

உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் சாலை மறியல்

Published On 2022-07-28 08:45 GMT   |   Update On 2022-07-28 08:45 GMT
  • உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
  • இன்று காலை மாணவர்கள் ஒன்று திரண்டனர்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூ ர்பேட்டை அருகே உள்ள சேந்தநாட்டில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி அரசு டவுன் பஸ் சென்று வருகிறது. இந்த பஸ்சில் வானாம்பட்டு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் உளுந்தூர்பேட்டை அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்த மாணவர்களுக்கு போதுமான பஸ் வசதி இல்லை. எனவேகூடுதல் பஸ்கள் விடவேண்டுமம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை இன்று காலை மாணவர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் கூ. கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் பஸ்சினை சிறை பிடித்து சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்க ப்பட்டது தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ெஜகதீசன் தலைமையி லான போலீசார் விரைந்து செ ன்றனர்.பின்னர் மாணவ-மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் உரிய பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பின்னர் மறியல் செய்த மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News