உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு மாணவிகள் செயல்முறை விளக்கம்

Published On 2023-01-29 09:29 GMT   |   Update On 2023-01-29 09:29 GMT
  • உறிஞ்சிகளின் தேர்வு மற்றும் முன் சிகிச்சை பற்றி செயல்முறை விளக்கம் அளித்தனர்.
  • 1 1/2 கிலோ முதல் 2 கிலோ எடையுள்ள வாள் உறிஞ்சிகளைத் தேர்ந்து எடுக்க வேண்டும்.

பென்னாகரம்,

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டாரத்தில் ஊரக வேளாண்மை பயிற்சி அனுபவம் பெற்று வரும் அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நான்காம் ஆண்டு மாணவிகள் திவ்யா, வித்யா, இலக்கியா, ஜனனி, மகிமா, நித்தியா ஸ்ரீ, பிரேமா, பிரியதர்ஷினி, சங்கீதா, சுவேதா ஆகியோர் தாவர நோயியல் ஆசிரியர் அருள்சாமி தலைமையில் கூத்தப்பாடி கிராமத்தில் விவசாயிகளுக்கு உறிஞ்சிகளின் தேர்வு மற்றும் முன் சிகிச்சை பற்றி செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நோய்கள் மற்றும் நூற்புழுக்கள் இல்லாத 1 1/2 கிலோ முதல் 2 கிலோ எடையுள்ள வாள் உறிஞ்சிகளைத் தேர்ந்து எடுக்க வேண்டும்.

புழுவின் வேர்கள் மற்றும் அழுகிய பகுதியை நறுக்கி, தோளில் இருந்து 20 சென்டி மீட்டர் விட்டு சூடோஸ்டெமை வெட்டி உறிஞ்சிகளின் அளவுக்கு தரம் பிரித்தல் குறித்து உட்பட பல்வேறு வழிமுறைகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். 

Tags:    

Similar News