உள்ளூர் செய்திகள்

தருமபுரி அருகே திருட்டுத்தனமாக இணைப்பு கொடுக்க முயன்ற டிரைவர் மின்சாரம் தாக்கி பலி

Published On 2022-11-21 15:11 IST   |   Update On 2022-11-21 15:11:00 IST
  • தானே திருட்டு தனமாக இணைப்பு கொடுக்க முயற்சி செய்துள்ளார்.
  • அவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள கண்ணுகாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தருமன் (வயது 39). இவர் ஒட்டி வந்தார். இவரது மனைவி ஆஷா. இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.

ஆஷா இங்குள்ள நிலத்தில் விவசாயம் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தருமன் ஊருக்கு வந்தார். அவர் தங்களது அவரை தோட்டத்துக்கு சென்றுள்ளார்.அங்கிருந்த ஆழ்துளை கிணற்றுக்கு கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்துள்ளது.

இதை பார்த்த தருமன் தானே திருட்டு தனமாக இணைப்பு கொடுக்க முயற்சி செய்துள்ளார்.அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து ஆஷா தந்த புகாரின்பேரில் பாலக்கோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News