பாவூர்சத்திரத்தில் மாநில அளவிலான சதுரங்கப்போட்டி
- மாநில அளவிலான சிறப்பு சதுரங்க போட்டி பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது.
- போட்டிகளை நெல்லை தெட்சணமாறநாடார் சங்கத்தலைவர் ஆர்.கே.காளிதாசன் தொடங்கி வைத்தார்.
தென்காசி:
மும்பை இந்திய பேனா நண்பர் பேரவையின் இணை அமைப்பான ஐ.பி.எல். செஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான சிறப்பு சதுரங்க போட்டி பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது.
போட்டிகளை நெல்லை தெட்சணமாறநாடார் சங்கத்தலைவர் ஆர்.கே.காளிதாசன் தொடங்கி வைத்தார். 3 பிரிவுகளில் 6 சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து 150 வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் நடுவர்களாக இசக்கி, சதீஷ்குமார், வைதேகி ஆகியோர் செயல்பட்டனர்.
முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. விழாவில் குலசேகரபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன், சதுரங்க ஆர்வலர் சிவா, செஸ் அகாடமி தலைவர் இசக்கி, சென்னை மாவட்ட சதுரங்க வீரர் ஜெப்ரீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஐ.பி.எல். செஸ் அகாடமி இயக்குனர் கண்ணன் செய்திருந்தார்.